அம்பாறை மாவட்டம், காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய நிலையில் நேற்று (மே-21) உயிரிழந்த இராணுவ சிப்பாயின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் கொரோனா எதிர்மறை (நெகட்டிவ்) என கிடைக்கப் பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம்> காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (மே-21) இரவு உயிரிழந்திருந்தார்.
அவர் சுவாசப் பிரச்சினை காரணமாக உயிரிழந்திருந்ததை அடுத்து அவரது மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த இராணுவ சிப்பாயின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பபெற்றுள்ளதாவும் அதன் அடிப்படையில் கொரோனா எதிர்தமறை (நெகட்டிவ்) என கிடைக்கபெற்றுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் சற்றுமுன்னதாக தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை